close
Choose your channels

அப்ரிடி ஒரு லூசு: கவுதம் காம்பீரின் காட்டமான பதிவு!

Saturday, May 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அப்ரிடி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அணியில் இருந்த போதிலும், அணியிலும் இல்லாத நேரத்திலும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பலமுறை கண்டனங்கள் பெற்றவர். இந்த நிலையில் அவர் சமிபத்தில் 'கேம் சேஞ்சர்' என்னும் தனது சுயசரிதையை வெளியிட்டார்.

இந்த சுயசரிதையில் அவர் கவுதம் காம்பீர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், 'கவுதம் கம்பீர் எந்த ஒரு பெரிய சாதனையும் செய்யவில்லை. ஆனால் அவர் தன் மனதில் டான் பிராட்மேன் என நினைத்து கொண்டிருக்கின்றார். கம்பீருக்கு மற்ற வீரர்களுடன் முறையாக நடந்து கொள்வதில் பிரச்சனை உள்ளது என்று கூறியுள்ளார்.

அப்ரிடியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கவுதம் காம்பீர், 'அப்ரிடி ஒரு லூசு. இப்போதும் பாகிஸ்தானியர்களுக்கு இலவச விசாவை இந்தியா வழங்கி வருகிறது. அப்ரிடி மனநல சிகிச்சை எடுக்க சம்மதித்தால் நானே ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அவரை அழைத்து செல்ல காத்திருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.