close
Choose your channels

பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்

Wednesday, October 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரதமர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு இளம்பெண் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் ஹஞ்சினாலா தாண்டா கிராமத்தை சேர்ந்த லதா என்ற இளம்பெண், தங்கள் குடும்பத்தினர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டதாக பிரதமர், முதல்வர் ஆகியோர்களுக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சி தலைவர் உள்பட உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டதால் தனது கல்லூரி படிப்பு பாதியில் நின்று போனதை எண்ணி மனமுடைந்த லதா, ஃபேஸ்புக் நேரலையில் சில கோரிக்கைகளை வைத்துவிட்டு பின்னர் கண்ணீருடன் தூக்க மாத்திரை மற்றும் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பினர் அவரது குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.