close
Choose your channels

அரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’பிகில்’ மற்றும் கார்த்தி நடித்த ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிறு அன்று தீபாவளி என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நல்ல வசூல் கிடைக்கும் என இரு படக்குழுவினர்களும் எதிர்பார்த்த நிலையில் அரசு அதிரடியாக தீபாவளிக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை என அறிவித்துள்ளது

அதாவது தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை நாள் என்றும், அதற்கு பதிலாக விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதியை பணி நாளாக அறிவித்து அரசாணை அறிவித்துள்ளது

இதனை அடுத்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் தீபாவளிக்கு வெளியாகும் பிகில் மற்றும் கைதி படக்குழுவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பால் வெள்ளி, சனி, ஞாயிறு, மற்றும் திங்கள் ஆகிய 4 நாட்கள் அதிகபட்சமான வசூல் இந்த இரு படங்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.