close
Choose your channels

நாகசைதன்யாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கவுதம் மேனன்

Tuesday, August 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு ஹீரோ நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது ஒரு இக்கட்டான நிலை. இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும் என்பதால் பல ஹீரோக்கள் இதை தவிர்ப்பது உண்டு. இப்படி ஒரு நிலை நாகசைதன்யாவுக்கு வந்திருந்த நிலையில் தனது அன்பான வேண்டுகோளால் நாக சைதன்யா அதை தவிர்த்துள்ளார்.
நாகசைதன்யா நடித்து முடித்துள்ள 'பிரேமம்' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு பதிப்பான 'Sahasam Swasaga Saagipo' ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் 'பிரேமம்' படம் வரும் செப்டம்பர் 9 இல் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.
ஆனால் அதே தேதியில் இயக்குனர் கவுதம் மேனனும், Sahasam Swasaga Saagipo' படம் ரிலீஸ் என தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இந்நிலையில் கவுதம்மேனனிடம் 'Sahasam Swasaga Saagipo' படத்தை அக்டோபருக்கு தள்ளி வைக்குமாறும், அந்த தேதியில் பிரேமம்' ரிலீஸ் ஆகவுள்ளதையும் நாக சைதன்யா எடுத்து கூறியபோது, அவருடைய கருத்தில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட கவுதம் மேனன் இப்படத்தை அக்டோபருக்கு ஒத்தி வைத்துள்ளார். தான் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நாகசைதன்யா விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.