close
Choose your channels

நடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு

Sunday, May 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வந்தார். அவர் தயாரித்த ‘என்.எச்.19’, ‘ஃபில்லாயூரி’, பாரி’ போன்ற பாலிவுட் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது அவர் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு வெப் சீரியல் ஒன்றை தயாரித்து வருகிறார். ‘Pataal Lok’ என்ற டைட்டில் கொண்ட இந்த வெப்சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலின் ஒரு பகுதியில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட இனத்தவர்களின் சங்க நிர்வாகிகள் தேசிய மனித உரிமை கமிஷனிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

இந்த சீரியலில் வரும் ஒரு சில காட்சிகள் தங்கள் இனத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் இதனால் தாங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த சீரியல் தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து தேசிய மனித உரிமை கமிஷன் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.