close
Choose your channels

ஆன்லைனில் சயனைடு வாங்கி மனைவியை கொலை செய்த பேங்க் மேனேஜர்: அதிர்ச்சி தகவல்

Tuesday, February 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவி வரதட்சணை வாங்கி வரவில்லை என்பதற்காக சயனைடு மாத்திரை கொடுத்து கணவரே கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதனபள்ளி என்ற பகுதியில் பேங்க் மேனேஜராக வேலை செய்துவரும் ரவி சைதன்யா என்பவருக்கும் ஆமினி என்ற பெண்ணுகும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக பெண் வீட்டார் ரவிக்கு 15 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆம்னியின் சகோதரிக்கு திருமணம் நடந்தபோது ஆமினியை விட அவரது சகோதரிக்கு அதிக வரதட்சணை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவி சைதன்யா தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென ஆம்னி பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு ரவி சைதன்யா தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்தனர் இந்த நிலையில் ஆமினியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆம்னி வழுக்கி விழுந்ததால் மரணம் அடையவில்லை இல்லை என்றும், அவருக்கு சயனைடு கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது.

இதனை அடுத்து ஆம்னி கணவர் ரவிசைதன்யாவுடன் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது ஆன்லைனில் சயனைடு வாங்கி அதை சத்து மாத்திரை என ஏமாற்றி மனைவிக்கும் கொடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதன்பின்னர் ரவியை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வரதட்சணைக்காக கட்டிய மனைவியை சயனைடு கொடுத்து கொலை செய்த கணவனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.