close
Choose your channels

கொரோனாவால் குழந்தைகளுக்கு ஏற்படும் மர்மநோய் இந்தியாவில் முதல் முறையாக பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன்

Thursday, May 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவாசாகி போன்ற அறிகுறியுள்ள ஒரு நோய் தாக்குவதாக அதிர்ச்சி ஏற்படுத்தும் செய்திகள் வெளியாகியது. அழற்சி எனப்படும் இந்த வீக்க நோய் குழந்தைகளுக்கு ஏற்படும் அரிதான கவாசாகி நோயை ஒத்திருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் இது கொரோனா பாதிப்பினால் ஏற்படும் நுரையீரல் வீக்கம் நோய் என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்து இருந்தனர். இந்த நோயை குறித்து தெளிவு பெறுவதற்காக குழந்தைகளைத் தாக்கும் 100 க்கும் மேற்பட்ட நோய்களைக் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் தகவல் வெளியிட்டு இருந்தது.

நியூயார்க்கில் 5 வயது முதல் 18 வயதுடைய சுமார் 54 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த வீக்க நோய் ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாக கடந்த வாரத்தில் கூறப்பட்டது. இதே போல அறிகுறி கொண்ட ஒரு மர்மநோயால் ஐரோப்பாவிலும் சில குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நோய் பற்றிய அறிகுறிகள், பாதிப்புகள் பற்றிய எந்த முன் விசாரணைகளும் இன்றி மருத்துவர்கள் திண்டாடி வருவதாகப் பரபரப்பு கிளம்பியது. அமெரிக்கா முழுவதும் குழந்தைகளைத் தாக்கும் இந்த நோய் அறிகுறி பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ளவும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.

குழந்தைகளை கொரோனா தாக்கும்போது வரக்கூடிய முதல் அபாயமாக சைட்டோகைன் பிரச்சனை கருதப்படுகிறது. அதாவது மனிதர்களை பாதிக்கும் பெரும்பாலானா பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் இதுவரை குழந்தைகளை பாதித்து இருக்காது. இதனால் அந்நோய்களுக்கான எதிர்ப்பு ஆற்றலும் அவர்களுக்கு இருக்காது. மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் வலுவாக இருப்பதால் ஒரு நோய்த்தொற்று அவர்களைத் தாக்கும்போது உடனடியாக விரைந்து அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகபடியான நோய் எதிர்ப்பு சுரப்பிகளைச் சுரந்து விடுகிறது.

ஏற்கனவே கொரோனா என்பது மனிதர்களின் சுவாச உறுப்புகளை தாக்கி அழிக்கும் அபாயம் உடையது. இந்நலையில் இந்த நோய் எதிர்ப்பு சுரப்பிகளும் சுரந்து நுரையிரலில் நீர்க்கோர்வை உண்டுபண்ணுகிறது. மேலும் இந்த நீர்க்கோர்வையானது நாளடைவில் கட்டிகளாக மாறி சுவாசத்தை கடுமையாகப் பாதிக்கிறது. அதோடு ரத்த குழாய்களிலும் கட்டிகள் ஏற்பட்டு இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. மேலும் உடல் முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகமாகி விடுகிறது. இத்தகைய நெருக்கடியான நிலைமையில் குழந்தைகளின் அனைத்து உடல் உறுப்புகளும் கடுயமையாக பாதிக்கப் படுகின்றன. இதனை பல உறுப்பு செயலிழப்பு என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொரோனா நோய் பாதிப்பு உச்சத்தை எட்டும் போது, கொரோனா நோய்த்தொற்று குழந்தைகளை அதிகளவு தாக்கும், அப்படி குழந்தைகளுக்கு கொரோனா தாக்கினால் விளைவுகள் கடுமையான இருக்கும் என முன்னமே விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். அதேபோல் அமெரிக்க , ஐரோப்பா போன்ற நாடுகளைத் தொடர்ந்து தற்போது சென்னையில் முதன் முறையாக ஒரு சிறுவனை இந்நோய் தாக்கி இருக்கிறது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கொரோனா குழந்தைகளை பாதிக்கும் இந்த ஹைப்பர் இன்ஃப்ளமேட்டரி சின்ட்ரோம் (Hyper inflammatory syndrome) சென்னையிலும் முதல் முறையாகப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது நச்சதிர்வு நோக்குறியையும் (Toxic Shock syndrome) ஏற்படுத்தி விடுகிறது. சென்னையில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலில் கண்கள் சிவந்து உதடுகள் வீக்கமடைந்து காய்ச்சலோடு காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். நோய் பாதிக்கப்பட்ட 5 நாள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்ததாகவும் 9 ஆம் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்ததாகவும் கூறப்படுகிறது.

லண்டன் மருத்துவமனையில் இதே அறிகுறியோடு அனுமதிக்கப்பட்ட 9 குழந்தைகளுக்கு முதலில் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவில்லை என்றும் ஒரு வாரம் கழித்து செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்புது நோய்த் தாக்கம் மிகவும் கடுமையான பாதிப்புகளோடு இருப்பதாலும் அது குழந்தைகளின் பல உறுப்புகளை ஒரே நேரத்தில் தாக்குவதாலும் மருத்துவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு காய்ச்சல், மந்தநிலை, உடல்சோர்வு, கண்கள் சிவந்து போதல், உணவு குறைந்து போதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறும் பெற்றோர்களுக்கு பல நாடுகளில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தோல் உரிதல், அதிகபடியான வியர்வை, நாக்கு வறட்டு தன்மையோடு இருத்தல் போன்ற அறிகுறியும் கவாசாகி நோயின் அறிகுறியாக இருப்பதால் இந்த அறிகுறி இருந்தாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.