close
Choose your channels

சசிகலா எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன். தீபா ஆவேச பேட்டி

Wednesday, January 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்த அவரது தோழி சசிகலா, விரைவில் முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கூடிய விரைவில் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வாய்ப்பு இருப்பதாகவும், முதல்வர் பதவியை ஏற்ற பின்னர் எம்.எல்.ஏ ஆக, தென்மாவட்டங்களில் பாதுகாப்பான தொகுதியை அதிமுகவினர் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக ஆண்டிப்பட்டி அல்லது உசிலம்படி தொகுதியில் சசிகலா போட்டியிடலாம் என தெரிகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலா எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
"சசிகலா முதல்வர் ஆனாலும், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அங்கு போட்டியிடுவேன். சாதி அரசியல் என்பதெல்லாம் இங்கு எடுபடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்.
அவர் உசிலம்பட்டியில் போட்டியிட்டாலும் களமிறங்குவேன். திண்டுக்கல் தொகுதியில் மாயத் தேவரை நிறுத்தி வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் களத்தில் தலைவராக உருவெடுத்தார் எம்.ஜி.ஆர். அதைப்போல, ஜெயலலிதாவின் ரத்த உறவான என்னை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். சசிகலாவின் சமூகத்து மக்களுக்கும் நான் யார் என்பது தெரியும். அவர்களும் என்னை ஆதரிப்பார்கள். பெண்கள் ஆதரவு முழுமையாக எனக்கு இருக்கிறது.
இரட்டை இலை சின்னம் ஒரு பிரச்னையே இல்லை. தலைமைக்குத்தான் ஓட்டு கிடைக்கும். பென்னாகரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு டெபாசிட் பறிபோனதும் மதுரை மேற்கில் தே.மு.தி.கவோடு திணறிய காலமும் உண்டு. எனவே, இரட்டை இலை சின்னத்தினால் மட்டும் சசிகலா வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் மூன்றாவது இடத்துக்குத்தான் தள்ளப்படுவார். அதிகாரத்தையும் பலத்தையும் மீறி மக்கள் ஆதரவில் வெற்றி பெறுவேன்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்ததைப் போல, சசிகலாவை தோற்கடிப்பேன். அதிகாரத்துக்குள் அவர் காலடி எடுத்து வைக்கும்போது, என்னுடைய முடிவை அறிவிப்பேன்" என தேர்ந்த அரசியல் தலைவரைப் போல் விவாதித்திருக்கிறார்.
இவ்வாறு தீபா பேட்டியில் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.