close
Choose your channels

'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூறும் முக்கிய தகவல்

Thursday, November 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 59வது படமான 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் நேற்று வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஒன்று ஒரு முக்கிய தகவலை ரசிகர்களுக்கும் மக்களுக்கும் கூறுவதாக விமர்சகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒரு ஸ்டில்லில் விஜய் ஒரு கூர்மையான பார்வையை பார்ப்பது போலவும், அவருடைய வாயை ஒரு கை மூடியிருப்பது போன்றும், இன்னொரு விஜய்யின் காது கூர்மையான எதையோ கேட்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயக்குனர் கூற வருவது என்னவெனில், 'கண்ணால் காண்பதும் பொய், வாயால் சொல்வதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்' என்பதே என கூறப்படுகிறது.

'தெறி' படம் ஒரு போலீஸ் ஸ்டோரி என்பதால் இந்த படத்திற்கு மிகப்பொருத்தமான ஒரு கருத்துடன் இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், எதிர்பார்ப்பையும் மீறி தெறிக்க விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.