close
Choose your channels

கணவருக்கு தெரிந்த கள்ளக்காதல்: தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி!

Wednesday, November 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எதிர்வீட்டு இளைஞருடன் கள்ளக்காதலில் ஒரு பெண் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த கள்ளக்காதல் அவருடைய கணவருக்கு தெரிந்துவிட்டதை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சிவண்ணா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமாரி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்

இந்த நிலையில் சிவண்ணாவின் மனைவி குமாரிக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நட்பாகி, நாளடைவில் காதலாகவும் மாறியது. இந்த கள்ள காதலை அறிந்த குமாரியின் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கணவர் சிவண்ணாவும் கடுமையாக கண்டித்து உள்ளதாக தெரிகிறது

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குமாரி, திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குமாரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு, எதிர்வீட்டு தினேஷால்தான் குமாரி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரை கைது செய்து வரும் வரை குமாரின் பிணத்தை எடுக்க மாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் குமாரின் உறவினர்களை சமாதானப்படுத்தி அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்

கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்ததால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.