close
Choose your channels

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

Saturday, July 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிவி சிந்து எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடினார். அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிவி சிந்து காலிறுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் அரையிறுதியில் சீன வீராங்கனை தாய் சூ யிங் உடன் மோதினார். இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 18-21, 12-21 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாளை பிவி சிந்து 3வது இடத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றால் அவருக்கு வெங்கலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிவி சிந்து பேட்மிட்டன் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.