close
Choose your channels

அடுத்த இரண்டு போட்டிகளில் இவரும் இல்லையா? கோலியின் முடிவால் அதிர்ச்சி!

Thursday, February 18, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் போட்டியின்போது பவுலிங்கில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் அசத்தி இருந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர். அதுவும் கடைசி போட்டியான கப்பா மைதானத்தில் இவர் எடுத்த 67 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. கப்பா மைதானத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி 67 ரன்களை அடித்த ஷர்துலைப் பார்த்து ரசிகர்கள் கடும் வியப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த ஷர்துல் தாகூரை தற்போது அணியில் இருந்து விலக்கி இருக்கிறார் கேப்டன் விராட் கோலி. இந்த முடிவால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடர் போட்டியில் விளையாடாமல் இருந்த உமேஷ் யாதவ் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 3 மற்றும் 4 ஆம் போட்டிகளில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அணியில் இடம்பெறாதது மட்டும் அல்ல ஷர்துல் தாகூரை விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு அனுப்பி உள்ளனர். இதனால் ஷர்துல் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே கேப்டன் விராட் கோலியின் செயலால் அதிருப்தி தெரிவிக்கும் ரசிகர்கள் ஷர்துல் விஷயத்தால் மேலும் கோபம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து நன்றாக விளையாடும் வீரர்களை ஏன் இவர் திடீர் திடீரென்று அணியில் இருந்து தூக்கியெறிகிறார் என்றும் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.