இந்தியாவின் லவ்லினா அபாரம்: மேலும் ஒரு பதக்கம் உறுதியானது!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவின் மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா 69 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். இன்று நடைபெற்ற பரபரப்பான காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா மிக அபாரமாக விளையாடி சீன வீராங்கனையை வீழ்த்தி உள்ளதை அடுத்து அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்
இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் தோல்வி அடைந்தால் வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்பதும் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றால் வெள்ளி அல்லது தங்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவுக்கு 2-வது பதக்கம் உறுதியானதை அடுத்து லவ்லினாவுக்கு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments