close
Choose your channels

சோபியாவின் டுவிட்டர் பக்கம் திடீர் மாயம்

Tuesday, September 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை-தூத்துகுடி விமானத்தில் சாதாரண சின்ன சண்டையாக ஆரம்பித்த தமிழிசை-சோபியா விவகாரம் அதன் பின்னர் காவல்துறையில் புகார், கைது, இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான டிரெண்ட் என ஊடகங்களின் இன்றைய தலைப்பு செய்தியாகவும், தொலைக்காட்சிகளின் விவாத பொருளாகவும் மாறிவிட்டது.

இந்த நிலையில் சோபியா பாஜகவுக்கு எதிராக திடீரென இன்று ஒருநாள் மட்டும் தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. கனடாவில் இருந்து கொண்டே தூத்துகுடி ஸ்டெர்லைட் பிரச்சனை, எட்டு வழிச்சாலை பிரச்சனை, இந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் குறித்து தொடர்ந்து தனது @Red_Pastures என்ற டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சென்னையில் இருந்து தூத்த்குடிக்கு அவர் விமானம் ஏறுவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்னரும் இன்று தமிழிசை முன் கோஷமிட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் சோபியாவின் டுவிட்டர் பக்கம் திடீரென மாயமானது. அவர் மீது சமூக விரோதி என்ற முத்திரை குத்தப்பட்டு வருவதால் அவர் தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.