close
Choose your channels

விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாவை விட அதிக சம்பளமா? 'பொன்னியின் செல்வன்' நடிகர் குறித்த வதந்தி!

Monday, August 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகருக்கு அந்த படத்தில் மற்ற கேரக்டர்களில் நடித்த விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய் ஆகியோர்களை விட அதிக சம்பளம் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. தமிழ் உள்பட 5 மொழிகளில் இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் அதாவது பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம் ரவிக்கு மற்ற நடிகர்களை விட அதிக சம்பளம் என்று வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்த படத்தில் நடித்த சீனியர் நடிகர்களான விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் கார்த்தியை விட ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் ஜெயம்ரவி நடித்து இருந்தாலும் இந்த படத்தின் உண்மையான கதாநாயகன் கார்த்தி நடித்த வந்தியதேவன் கேரக்டர் தான் என்பது பொன்னின் செல்வன் நாவலை படித்தவர்களுக்குத் தெரியும். ஆரம்பம் முதல் கடைசி வரை வந்தியத்தேவன் கேரக்டருக்குத்தான் அமரர் கல்வி முக்கியத்துவம் கொடுத்திருப்பார். எனவே மற்ற நடிகர்களைவிட பொன்னியின் செல்வன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் என்பதை பலர் நம்ப மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இது முழுக்க முழுக்க வதந்தி என்று ஜெயம்ரவிக்கு மற்ற நடிகர்களை விட அதிக சம்பளம் கொடுப்பதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.