திரையில் ரிலீஸ் ஆகும் முன்பே போட்ட முதலீட்டை எடுத்துவிட்ட ஜெயம் ரவி படம்.. மகிழ்ச்சியில் படக்குழு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஜெயம் ரவி நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திரைக்கு வெளியாகும் முன்பே இந்த படத்தின் வியாபாரத்தின் சில பகுதி முடிந்து, செலவு செய்த பணத்தை எடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்பதும் இவர் நடித்த ’JR30’ என்ற திரைப்படத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜி நெட்வொர்க் நிறுவனம் ரூ.37 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் ஹிந்தி டப்பிங் உரிமை 9 கோடி ரூபாய்க்கும் ஆடியோ உரிமை ரூ.2.5 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக தெரிகிறது. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் முன்னரே இந்த படத்திற்காக தயாரிப்பாளர் செலவு செய்த பணம் வந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.