close
Choose your channels

ரசிகர்களுடன் ஜெயம் ரவி நடத்திய சுவாரஸ்யமான உரையாடல்களின் தொகுப்பு

Thursday, February 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு வெற்றி நாயகனாக வலம் வந்த ஜெயம் ரவி, இந்த வருடமும் தனது வெற்றிக்கணக்கை நாளை முதல் தொடங்கவுள்ளார். அவர் நடித்த 'மிருதன்' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் ஜெயம் ரவி தனது ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்களின் சுவாரஸியமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்த உரையாடலில் தனது சகோதரர் ஜெயம் ராஜா நடிப்பில் தான் ஒரு படத்தை இயக்க ஆசை என்றும் அந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், தான் சினிமாவிற்கு வர தனது தந்தையும் கமல்ஹாசன் அவர்களுமே காரணம் என்று கூறினார். மேலும் தனக்கு பிடித்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு என்றும் தனது மனைவிக்கு பிடித்த நடிகர் அரவிந்தசாமி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 'மிருதன்' என்ற டைட்டிலை பாடலாசிரியர் மதன் கார்க்கிதான் தேர்வு செய்ததாகவும், அவருக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறிய ஜெயம் ரவி, தனக்கு ஹாலிவுட்டில் பிடித்த ஜோம்பி திரைப்படம் Resident Evil என்ற திரைப்படம் என்றும், மிருதனுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மீண்டும் ஜோம்பி டைப் படத்தில் நடிக்க விரும்புவதாகவும் கூறினார்.
மேலும் தனக்கு பிடித்த நடனம் ஆடும் நடிகர் பிரபுதேவா என்று கூறிய ஜெயம் ரவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு பிடித்த நடனம் ஆடும் நடிகர் பிரபுதேவா என்று கூறிய அவர், விரைவில் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.