close
Choose your channels

'கடைக்குட்டி சிங்கம்' படத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள்

Monday, July 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தில் ஒரு ஹீரோ புகைப்பிடித்தால் ரசிகர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவதாக இதுவரை நெகட்டிவ் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு திரைப்படத்தால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரிதாகவே செய்தி வருகிறது

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தால் தமிழகத்தில் இரண்டு நல்ல காரியங்கள் நடந்துள்ளது. இந்த படத்தில் வயதான பெண் ஒருவர் தனது விவசாய பொருளை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்த நிலையில் கார்த்தி, ஒரு பேருந்தை நிறுத்தி அவரை பேருந்தில் அவரை ஏற்றிவிடுவார். விவசாயிகளுக்கு பேருந்துகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கண்டக்டரிடம் வசனம் பேசுவார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லாரி ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் விவசாயிகளின் விளை பொருட்கள் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றி செல்லலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் விவசாயத்தின் விளைபொருட்களை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் இந்த படத்தில் ஒருசில காட்சிகள் உள்ளது. அதன்படி நெல்லையில் உளள ஒரு திரையரங்கில் தற்போது இளநீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் சில நாட்களில் நுங்கு உள்பட ஒருசில பொருட்களை திரையரங்கில் விற்பனை செய்யவும் திரையரங்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த புதிய முயற்சிக்கு சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருகிவருகிறது. இதனை தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.