close
Choose your channels

நடிகை காஜல் அகர்வால் செய்த மிகப்பெரிய நிதியுதவி

Thursday, April 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு, நலிந்த நடிகர்களுக்கு என பல்வேறு தரப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தாராளமாக நிதியுதவியை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரும்பாலும் நடிகர்களே நிதியுதவி செய்து வருவதாகவும் நடிகைகளில் வெகுசிலர் மட்டுமே உதவி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு ஒன்று இருந்து வருகிறது. இந்த நிலையில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் ரூ.6 லட்சம் நிதியுதவி குறித்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

இந்த ரூ.6 லட்சத்தில் ரூ.2 லட்சம் பெப்சி அமைப்பினர்களுக்கும், ரூ.2 லட்சம் தெலுங்கு திரைப்படவுலக கொரோனா டிரஸ்ட்டுக்கும், ரூ.1 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், ரூ.1 லட்சம் மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் அவர் வழங்கியுள்ளார்.

மேலும் மும்பையை சேர்ந்த பல ஏழை எளிய மக்களுக்கு அவர் உணவுகளையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பிற்கும் அவர் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.