close
Choose your channels

கமல், விஜய் பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கே முரளிதரன் திடீரென மாரடைப்பால் காலமானதால் திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் கே முரளிதரன் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். சரத்குமார் நடித்த ’அரண்மனை காவலன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக வலம் வந்த கே முரளிதரன் அதன்பின்னர் கமல்ஹாசனின் ’அன்பேசிவம்’ விஜய்யின் ’பகவதி’ சூர்யாவின் ’உன்னை நினைத்து’ தனுஷின் ’புதுப்பேட்டை’ சிம்புவின் ’சிலம்பாட்டம்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே முரளிதரன் இன்று கும்பகோணத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.