close
Choose your channels

'காந்தாரா' ரிஷப் ஷெட்டிக்கு மனைவி கொடுத்த முதல் கிஃப்ட்: மனைவின்னா இப்படியில்ல இருக்கணும்!

Tuesday, October 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’காந்தாரா’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.16 கோடி என்ற நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’காந்தாரா’ வெற்றியால் ஒருபுறம் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள் குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் அவருடைய குடும்பம் குறித்த தகவலும் குறிப்பாக அவருடைய மனைவி பிரகதி அவருக்கு முதல் முதலாக கொடுத்த பரிசுப்பொருள் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் பிரசாந்த் ஷெட்டி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரகதி என்பவரை திருமணம் செய்த நிலையில் இவருக்கு மூன்று வயதில் ஆண் குழந்தையும் இந்த ஆண்டு பிறந்த ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில் இவருடைய மனைவி பிரகதி தனது கணவருக்கு கொடுத்த முதல் பரிசு ஓல்ட் மங்க் ரம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. இந்த தகவலை கேட்ட நெட்டிசன்கள் மனைவி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் ரிஷப் பண்ட் தனது மனைவிக்கு முதல்முதலாக கம்மல் ஒன்றை தனது அன்பு பரிசாக கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.