close
Choose your channels

ஆயிரம் வழக்கு போட்டாலும் எதிர்கொள்வேன்: விடுதலைக்கு பின் கருணாஸ் பேட்டி

Saturday, September 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஆகியோர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக நடிகரும் திருப்புவனம் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிற்காக அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 'ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து சற்றுமுன் கருணாஸ் வேலூரி சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், 'இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்றும், என்மீதான வழக்கில் உண்மை நின்றது; நீதி வென்றதாகவும் கூறினார்.

இந்த நிலையில் 2 வழக்குகளில் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ள கருணாஸ் எம்எல்ஏ, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.