close
Choose your channels

விமர்சித்தால் மட்டும் போதாது! களத்தில் இறங்கி போராடுங்கள்: கமலுக்கு கருணாஸ் வேண்டுகோள்

Saturday, July 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது பேட்டியிலும், சமூக வலைத்தள பக்கத்திலும் சமூக, அரசியல் கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசு மீது அவர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்து கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில் காமெடி நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் கமலுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: கமல்ஹாசன் அவர்கள் மிகச்சிறந்த ஒரு நடிகர் என்பதில் யாருக்கும் ஐயப்பாடு இருக்க முடியாது. சிலகாலமாக அரசியல் குறித்து அவருடைய கருத்துக்களும் இந்த அரசாங்கத்தின் மீதான அவருடைய கோபமும், அரசுத்துறைகள் சரியாக இல்லை என்ற அவருடைய குற்றச்சாட்டுக்களையும் கவனித்து கொண்டு வருகின்றேன்.
நான் அவரிடத்தில் வைக்கும் ஒரு வேண்டுகோள், 'சரியில்லை என்றால் அதை சரி செய்வதற்கான கடமை உங்களுக்கும் உண்டு, எனக்கும் உண்டு. உங்களுக்கு அதில் அதிக நாட்டம் உண்டு. இந்த அரசோ, இந்த அரசின் நடவடிக்கைகளோ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக களத்தில் இறங்கி போராடலாம்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.