close
Choose your channels

ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு: விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் நோட்டீஸ்

Sunday, July 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு கூறி நோட்டீஸ் அனுப்புவது கடந்த சில காலமாகவே ஃபேஷனாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு மலையாள நடிகை விவகாரத்தில் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் நேற்று பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'கருப்பன்'. விஜய் சேதுபதி, தான்யா, பாபிசிம்ஹா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. அதில் விஜய்சேதுபதி அட்டகாசமாக காளையை அடக்குவது போன்ற காட்சி இருந்தது.

இந்த நிலையில் 'கருப்பன்' படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, இயக்குனர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் காத்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது, காளையின் பெயருக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில், கருப்பன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.