close
Choose your channels

'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை வெளியிட மாட்டோம்: நீதிமன்றத்தில், தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்

Tuesday, February 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’காசேதான் கடவுளடா’ திரைப்படத்தை இப்போதைக்கு திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ’காசேதான் கடவுளடா’. இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது.

இந்த நிலையில் சென்னை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை சேர்ந்த ராஜ் மோகன் என்பவர் ’காசேதான் கடவுளடா’ படத்தை எடுப்பதற்காக தன்னிடம் ரூ.1.75 கோடி கடன் பெற்றதாகவும் ரிலீசுக்கு முன்னரே இந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்

ஆனால் ஒப்பந்தத்தை மீறி இந்த படத்தை பணம் கொடுக்காமல் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் மீதித்தொகை கொடுக்கும் வரை இந்த படத்தை வெளியிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறோம் என்றும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கு மார்ச் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.