close
Choose your channels

பேரன் லவ்லி போட்டு பளபளவென இருக்கிறீர்களே... கதிர் ஆனந்த் பேச்சுக்கு பின்னணி என்ன?

Thursday, March 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக எம்பி கதிர் ஆனந்த் மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் பேசிய பேச்சை எதிர்க்கட்சிகள் திரித்து, தொழில்நுட்ப ரீதியில் மாற்றம் செய்து உள்ள நிலையில் அதற்கு கதிர் ஆனந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்த், மிகவும் இயல்பாக பிரச்சாரத்தில் பேசி வருகிறார். அவர் மக்களுடன் மக்களாக அவர்களது குடும்பத்தில் ஒருவராக இருப்பதால் சகஜமாக பேசி வருகிறார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ’நலமாக இருக்கிறீர்களா? அனைவரும் பவுடர் அடித்து பேரன் லவ்லி போட்டு பளபளப்பாக இருக்கிறீர்களா? என்று கேட்டார்.

உடனே மக்கள் தளபதி கொடுத்த ஆயிரம் ரூபாய் காரணமாக மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று கூறினார்கள். தளபதி ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க எனக்கு மனம் நெகிழ்கிறது’ என்று கூறினார் .

மிகவும் சகஜமாக மக்களுடன் நடந்த இந்த உரையாடலை எதிர்க்கட்சியினர் தொழில்நுட்பம் மூலம் மாற்றம் செய்து கதிர் ஆனந்த் அவர்களை இழிவு படுத்துவது போல் வன்மத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். ஆனால் உண்மையை அறிந்த மக்கள் தங்களை கருத்துக்களை திரித்து வீடியோ வெளியிட்டவர்களுக்கு கண்டனத்தை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.