close
Choose your channels

கடுமையான வார்த்தைகளில் கவின் பதிவு செய்த காதல் கவிதை யாருக்காக?

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான வார்த்தைகளில் காதல் கவிதை ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின், லாஸ்யா ஆகிய இருவருக்கும் காதல் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை என்பதும் ஒருவர் பெயரை இன்னொருவர் கூறுவதை தவிர்த்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காதல் குறித்து கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் பதிவுசெய்துள்ளார். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கவின் எழுதிய இந்த கவிதை யாருக்கு? என்பதே அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

கவின் எழுதிய கவிதை இதோ:

நீங்கள் நேர்மை, வெளிப்படைத்தன்மைக்கு தகுதியானர், உங்கள் மனமறிந்து பொய் சொல்லாமல் உங்களை மதிக்கும் ஒருவருக்கு உண்மையான தகுதியாக இருக்க வேண்டும். பாராட்டு, விஸ்வாசத்திற்கு தகுதியானராக இருக்க வேண்டும். உங்கள் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாத ஒருவரின் அன்புக்கு தகுதியாக இருக்க வேண்டும். எத்தனை பேர் உங்களை விட்டு போனாலும், எப்போதும் உங்களுக்காக நிற்கும் ஒருவருக்கு தகுயுடையவராக இருங்கள். உங்களிடம் உண்மையாக இருக்கும் ஒருவரை எப்போதும் குறைவாக மதிப்பிட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.