close
Choose your channels

3 வருடங்களுக்கு முன் பாடிய பாடலை அச்சு அசராமல் பாடிய கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ

Friday, September 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் மூன்று வருடங்களுக்கு முன் பாடிய பாடலை மீண்டும் பாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அழகாக பாடுவாரா என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பின் சிவகார்த்திகேயன் நடித்த ’ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, தனுஷ் நடித்த ’தொடரி’ விஷால் நடித்த ’சண்டக்கோழி 2’ விக்ரம் நடித்த ’சாமி 2’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ உள்பட பல படங்களில் நடித்தார். மேலும் நடிகர் திலகம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ’மாமன்னன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நேற்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பாடிய அதே பாடலை நேற்று ஓணம் பண்டியையை ஓட்டி பாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இரண்டு வீடியோவிலும் அவர் அச்சுஅசராமல் ஒரே மாதிரியாக பாடியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.