close
Choose your channels

'அண்ணாத்த' படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கூறிய கேரள அரசு!

Saturday, October 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள அரசு ’அண்ணாத்த’ படக்குழுவினருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் திரையரங்குகள் திறக்க இன்னும் அனுமதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ’அண்ணாத்த’ திரைப்படம் ரிலீஸ் ஆனாலும், திரையரங்குகள் திறக்கப்படாததால் கேரளாவில் மட்டும் ரிலீஸ் ஆகாது என்று கூறப்பட்டது.

ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி கேரளாவில் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் திறக்கப்படும் என்றும் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ’அண்ணாத்த’ படக்குழுவினருக்கும் கேரள சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனை அடுத்து ’அண்ணாத்த’ படத்தின் கேரள திரையரங்க ரிலீஸ் உரிமைகள் குறித்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.