close
Choose your channels

இரண்டு முறை திருமணம் செய்த கோடீஸ்வரர் மகள்: திடீரென மர்ம மரணம்!

Tuesday, August 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோடீஸ்வரர் ஒருவரின் மகள் இரண்டு முறை திருமணம் செய்ததாகவும் அதன்பின்னர் திடீரென அவர் சில காலம் மாயமாகி, மீண்டும் சொந்த ஊர் வந்து லாட்ஜ் அறை ஒன்றில் தங்கிய நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் உள்ள கன்னூர் என்ற பகுதியை சேர்ந்தவர் அகிலா என்ற இளம்பெண், அந்த பகுதியில் உள்ள கோடீஸ்வரர் ஒருவரின் மகள் என்றும் ஏராளமான சொத்துக்கு சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அகிலா, ஒருவரை காதல் திருமணம் செய்தார். ஆனால் ஒரு சில மாதங்களில் அவரை விட்டுப் பிரிந்து விவகாரத்து செய்துவிட்டார்.

அதன்பின் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரை திருமணம் செய்து மூன்றே மாதத்தில் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று விட்டார். இந்த நிலையில் திடீரென 30 லட்ச ரூபாய் நோக்கம், 40 சவரன் தங்க நகைகளுடன் அகிலா மாயமானார். அவர் எங்கே சென்றார்? என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சொந்த ஊர் வந்த அகிலா, அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவர் தனது உறவினர்களை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென லாட்ஜ் அறையில் மர்மமான முறையில் அகிலா மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களாக கையில் லட்சக்கணக்கில் பணம் நகைகளுடன் எங்கே சென்றார்? யார் யாரை சந்தித்தார்? என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் லாட்ஜில் அகிலா அறை எடுத்து தங்கிய போது அவர் கையில் சுத்தமாக பணம் இல்லை என்றும் நகைகளும் இல்லை என்றும் சோர்வாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் அகிலாவின் உறவினர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.