close
Choose your channels

விஜய் அந்த இடத்தை நிச்சயம் பிடிப்பார்: கோவை சரளா

Tuesday, October 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல் திரைப்படம் தமிழக அரசியலை ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் சிறு வேடமாக இருந்தாலும் சிறப்பான வேடத்தில் நடித்தவர் கோவை சரளா.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த சுமார் 40 படங்களில் நடித்துள்ள கோவை சரளா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் இந்த படத்தில் நடித்துள்ளார். அதாவது கடந்த 1986ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வசந்த ராகம்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த படத்தில் கோவை சரளா நடித்தார். அதற்கு பின்னர் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் விஜய்யின் 'மெர்சலில் நடித்துள்ளார்.

இதை ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்த கோவை சரளா விஜய் குறித்து மேலும் கூறியபோது, 'முன்பு நான் பார்த்த விஜய்க்கும் இப்போது நான் பார்க்கும் விஜய்க்கும் ரொம்ப வித்தியாசம் இருந்தது. தற்போது அவர் மெச்சூர்டாக உள்ளார். மேலும் 'நான் ஒரு இடத்தை நினைக்கின்றேன். அந்த இடத்திற்கு அவர் வருவார் என்று எதிர்பார்க்கின்றேன். அந்த இடத்தை அடையும் பொறுமையும், நிதானமும் அவரிடம் உள்ளது' என்று கூறினார். 
கோவை சரளா குறிப்பிட்ட அந்த இடம் என்னவாக இருக்கும் என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடுங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.