close
Choose your channels

என்னால முடியாததை மாரி செல்வராஜ் நல்லா செய்றார்: உதயநிதி குறித்து கிருத்திகா!

Monday, July 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என்னால் முடியாததை இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றாக உதயநிதியை பிழிந்து எடுக்கிறார் என பேட்டி ஒன்றில் இந்த உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ’மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ’இந்த படத்தை பற்றி ஏதாவது கூறினால் மாரிசெல்வராஜ் என்னை போன் போட்டு திட்டுவார்’ என்றும் அதனால் எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் உதயநிதியை நன்றாக மாரி செல்வராஜ் பிழிந்து எடுக்கிறார் என்று கேள்விப்பட்டேன் என்றும் என்னால் முடியாததை அவர் செய்கிறாரே என்பதை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று காமெடியாக கூறினார்.

மேலும் தனது மகன் இன்பநிதி தற்போது தமிழ் படங்களை எல்லாம் பார்க்க ஆரம்பித்து உள்ளார் என்றும் ‘பீஸ்ட்’ படத்தை அதிகாலை 4 மணி காட்சியை தனது நண்பர்களுடன் பார்த்தார்’ என்றும் கூறினார்.

மேலும் சில மாதங்களாக அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இப்பொழுதுதான் பிளஸ் 2 முடித்திருக்கின்றாய், முதலில் டிகிரியை முடி, நடிப்பது ஒன்றும் அவ்வளவு ஈசி கிடையாது என்றும் நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளை நாங்கள் கண்ட்ரோல் செய்ய மாட்டோம் என்றும் அவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ, அதுவாகவே ஆகட்டும் என்று நாங்கள் விட்டு விடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.