close
Choose your channels

அஜித்தின் தயக்கத்தை நீக்கிய கே.எஸ்.ரவிகுமார்: ஒரு மலரும் நினைவு!

Tuesday, November 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’வரலாறு’ திரைப்படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு தயக்கம் ஏற்பட்டதாகவும் அந்த தயக்கத்தை சிவசங்கர் மாஸ்டர் அவர்களை உதாரணமாக காட்டி தீர்த்து வைத்ததாகவும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தனது மலரும் நினைவுகளாக தெரிவித்துள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி காலமானார் என்பது தெரிந்ததே. அவருடன் ’வரலாறு’ திரைப்படத்தில் பணிபுரிந்த போது ஏற்பட்ட மலரும் நினைவுகளை கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

சிவசங்கர் மாஸ்டர் அவர்களை எனக்கு நீண்ட காலமாக தெரியும் என்றும், அஜித் நடித்த ’வரலாறு’ திரைப்படத்தில் அவர் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய போது அஜித்துக்கு தனது கேரக்டர் குறித்து சின்ன தயக்கம் இருந்தது என்றும், தனது கேரக்டர் பெண் தன்மையுடன் இருப்பதால் தனது கேரக்டர் தவறாக புரிந்து கொள்ளப்படுமா என்ற தயக்கம் அஜித்துக்கு இருந்தது என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து சிவசங்கர் மாஸ்டர் அவர்களும் பெண் தன்மையுடன் இருப்பார் என்றும் ஆனால் அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு என்றும் அவர் தன்னுடைய நடனக் கலையை உடலில் ஏற்றுக் கொண்டதே இதற்குக் காரணம் என்றும் பெண்தன்மை இருந்தாலும் அவரை தவறான கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை என்றும் அஜித்திடம் தான் கூறியதாகவும் அதனை அடுத்து அஜித் தயக்கத்தை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் கேரக்டருக்கு சிவசங்கர் என்ற பெயர் வைக்கவும் அவர் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.