close
Choose your channels

கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்: தமிழ் நடிகைகளின் ஆவேச கருத்து!

Wednesday, August 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக பொதுச்செயலாளராக இருந்த கேடி ராகவன் அவர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று நேற்று இணையதளத்தில் வைரலானதை அடுத்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகைகளும் பாஜக பிரபலமுமான குஷ்பு மற்றும் காயத்ரி ரகுரம் ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இன்று காலை எழுந்தவுடன் என் கண்களையே என்னால் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சிகரமான சம்பவமாக இருந்தது என்றும், சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது என்றும், தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும் தெய்வம் கண்டிப்பாக தண்டிக்கும் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகை குஷ்பு இதுகுறித்து கூறிய போது ’தமிழக பாஜகவிலும், தேசிய பாஜகவிலும் எனக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு வருகின்றன என்றும், ஆனால் இந்த சம்பவம் ஒரு துரதிஷ்டவசமானது என்றும், கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம் என்றும், ஆனால் அதே நேரத்தில் பாஜகவில் பெண்களை மதிப்பதே இல்லை என ஒட்டுமொத்தமாக கட்சியை குற்றம் கூறுவது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகிய இருவரது கருத்துக்களுக்கும் நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.