close
Choose your channels

'அரண்மனை 2' முதல் நாள் முதல் காட்சியில் குஷ்பு-த்ரிஷா

Saturday, January 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா மற்றும் பலர் நடித்த 'அரண்மனை 2' திரைப்படம் ரிலீசாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக பொள்ளாச்சியில் 'கொடி' படப்பிடிப்பில் இருந்த நடிகை த்ரிஷா நேற்று சென்னை வந்துள்ளார்.


ரிலீஸுக்கு முன்பே 'அரண்மனை 2' திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்ததால், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இணைந்து இந்த படத்தை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளதாக த்ரிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளதாக அவர் கூறினார். சுந்தர் சி இயக்கத்தில் தான் நடிக்கும் முதல் படம் என்றும், தான் நடிக்கும் முதல் பேய்ப்படம் என்றும் கூறிய த்ரிஷா, சித்தார்த்துடன் பத்து வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த படத்தில் பேயாக நடிக்கும்போது கண்ணிமைக்காமல் பல காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது என்றும் இந்த காட்சிகள் தனக்கு பெரும் சவாலாக இருந்ததாகவும் த்ரிஷா கூறினார். மேலும் படம் பார்க்கும்போது ரசிகர்களின் கைதட்டல் தனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஹன்சிகா மிக அருமையாக நடித்துள்ளார் என்றும், அவருடைய கேரக்டர் படத்திற்கு பலம் வாய்ந்த கேரக்டர் என்றும் த்ரிஷா மேலும் கூறினார். சென்னை சத்யம் திரையரங்கில் இந்த படத்தை த்ரிஷா, தயாரிப்பாளர் குஷ்புவுடன் இணைந்து பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.