close
Choose your channels

பாஜகவில் இணைகிறாரா தமிழ் நடிகையின் கணவர்? எல்.முருகனுடன் சந்திப்பு

Wednesday, March 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகையின் கணவரும் பிரபல இயக்குனருமான ஒருவர் பாஜக அலுவலகத்தில் எல் முருகன் அவர்களை நேரில் சந்தித்து பேசி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு என்பது தெரிந்ததே. இவர் தற்போது திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அனேகமாக அந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் குஷ்பு பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் குஷ்புவின் கணவரும் பிரபல இயக்குனருமான சுந்தர் சி சற்றுமுன் பாஜக அலுவலகம் சென்று பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பின்போது சுந்தர் சி பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் சுந்தர் சி பாஜகவில் இணைவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஷ்பு திமுகவில் இருந்த போதும், காங்கிரசில் இருந்த போதும் அரசியலில் ஈடுபடாமல் இருந்த சுந்தர் சி, தற்போது பாஜகவில் இணைய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.