close
Choose your channels

நடுக்காட்டில் பல நாட்களாக தூக்கில் தொங்கிய காதல் ஜோடியின் பிணங்கள்: அதிர்ச்சி தகவல்

Monday, December 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அடர்ந்த காட்டுப்பகுதியில் காதல் ஜோடி ஒன்றின் பிணங்களை போலீசார் பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் கண்டுபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்ற 25 வயது இளைஞரும் ஸ்ரீலட்சுமி என்ற 21 வயது பெண்ணும் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். முதலில் இருவரும் நட்பாக பழகி பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ஆனால் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தபோது இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இரு வீட்டார்களும் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த காதலர்கள் தங்கள் வீட்டு பெற்றோர்களுடன் பேசாமல் கோபத்தில் இருந்துள்ளனர். சில நாட்கள் கழித்து கோபம் சரியாகிவிடும் என்று பெற்றோர்களும் விட்டுவிட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீலட்சுமி தன்னுடைய தாய்மாமாவிற்கு போன் செய்து ’இதுவரை எங்களால் உங்களுக்கு அதிக தொல்லைகள், இனிமேல் எந்த தொல்லையும் இருக்காது’ என்று கூறி போனை கட் பண்ணிவிட்டு சுவிட்ச் ஆப் செய்து விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீலட்சுமியின் பெற்றோர்கள் இதுகுறித்து பெங்களூர் போலீசில் புகார் அளித்தனர்

இந்த புகாரின் அடிப்படையில் அபிஜித் மட்டும் ஸ்ரீலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அடர்ந்த காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கியபடி இரண்டு பிணங்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அந்தப் பிணங்களை கைப்பற்றியபோது அபிஜித் மற்றும் ஸ்ரீலட்சுமி தான் அந்த பிணங்கள் என்பதை உறுதிசெய்தனர் சாதியை காரணம் காட்டி பெற்றோர்கள் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் அடர்ந்த காட்டுப் பகுதியில் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் பல நாட்கள் யாராலும் கவனிக்கப்படாமல் இருந்ததால் இருவரது பிணமும் அழுகிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இரண்டு பிணங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.