திருமணமான பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணமாகி குழந்தை உள்ள ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண் தனது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து அவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரை சேர்ந்த பெண் சலோமி. இவர் திருமணமாகி குழந்தையுடன் தனியே வசித்து வந்தார். இவரை அந்த பகுதியில் உள்ள தனியார் பேருந்து கண்டக்டர் சுந்தர மூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலை சலோமியிடம் கூற அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று வடலூர் பேருந்து நிலையம் அருகே வேலை விஷயமாக வந்த சலோமியை வழிமறித்த சுந்தரமூர்த்தி தன்னை காதலிக்க விட்டால் பெட்ரோல் ஊற்றி கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இருந்தும் இந்த காதலை சலோமி ஏற்றுக்கொள்ளாததால் உடனே பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதனால் கடுமையான தீக்காயங்களுடன் அலறிய சலோமியை அந்த பகுதியில் உள்ளவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சலோமியை கொலை செய்ய முயற்சித்த சுந்தரமூர்த்தியை அந்த பகுதியில் உள்ளவர்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments