close
Choose your channels

இத்தாலியில் மணிரத்னம் மகனுக்கு ஏற்பட்ட பிரச்சனை: சுஹாசினி டுவீட்டால் பரபரப்பு

Monday, August 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நட்சத்திர ஜோடியான மணிரத்னம்-சுஹாசினியின் ஒரே மகன் நந்தன் வெளிநாட்டில் அரசியல் மற்றும் தத்துவியல் படித்து வருகிறார். இந்த நிலையில் இத்தாலியில் உள்ள பெலுன்னோ என்ற இடத்தில் நந்தனிடம் இருந்த பணம் உள்பட முக்கிய பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் கையில் பணம் இல்லாமல் தவித்த நந்தன் மொபைல் போனில் பேட்டரியும் இல்லாததால் தனியாக தவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுஹாசினி உடனே தனது சமூக வலைத்தளத்தில், 'என் மகனிடம் உள்ள பொருட்களை யாரோ திருடிவிட்டார்கள். யாராவது வெனிஸ் மார்க் சதுக்கம் பக்கம் இருந்தால் உடனே அவருக்கு உதவுங்கள்` என்று டுவீட் செய்திருந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சில மணி நேரத்தில் தன் மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு உதவியவர்களுக்கு எனது நன்றி என்றும் தெரிவித்திருந்தார். நந்தன் பொருட்கள் திருடு போனது குறித்து இத்தாலி போலீஸில் புகார் செய்துள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.