close
Choose your channels

சென்னையின் முக்கிய பகுதியை தத்தெடுத்த மணிரத்னம்-சுஹாசினி

Monday, December 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை மற்றும் ஏரிகளில் உபரிநீர் திறந்ததால் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில் கோலிவுட் திரையுலகினர் பலர் சென்னை மக்களுக்கு கைகொடுத்து நிதியுதவியும், நிவாரண பணியையும் செய்து வந்தனர்.


இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி, சென்னை கோடூர்புரத்தில் உள்ள சூர்யா நகர் என்ற பகுதியை தத்தெடுத்துள்ளனர். நேற்று மணிரத்னம் தம்பதியினர் சூர்யா நகருக்கு சென்று முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்தனர். பின்னர் வெள்ளம் வடிந்த பின்னர் தேவைப்படும் முக்கிய மருந்து பொருட்களை அப்பகுதி மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

மேலும் அப்பகுதி முக்கியஸ்தர்களுடன் கலந்தாய்வு செய்த மணிரதனம்-சுஹாசினி, அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளனர். இந்த தம்பதியை போன்று சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரபலங்கள் தத்தெடுத்தால் மிக விரைவில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.