close
Choose your channels

விபத்தில் சிக்கிய விஜய்சேதுபதி பட நாயகியின் தத்துவ மழை!

Saturday, October 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் அறிமுகமாகி அதன் பின் ‘தேவராட்டம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது இவர் விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் விபத்தில் சிக்கிய நடிகை மஞ்சிமா மோகன், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக முழு ஓய்வில் உள்ளார். இதுகுறித்து மஞ்சிமா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

சில வாரங்களுக்கு முன்பு எனக்கு நிகழ்ந்த ஒரு விபத்து காரணமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை படுக்கையிலேயே கழித்து வருகிறேன்.

முன்னதாக என்னிடம் "நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான நிலைமை என்ன?" என்று சிலர் கேட்டபோது, ’அதிர்ஷ்டவசமாக இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை என்று பதிலளித்தேன். ஆனால் இப்போது அது எனக்கு நிகழ்ந்து விட்டது.

படுத்த படுக்கையிலேயே சில நாட்கள் இருப்பது எளிதானது அல்ல. என் வேலை உள்பட பல விஷயங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் என்னை நானே புரிந்து கொள்வதற்கு இந்த காலம் எனக்கு கைகொடுத்தது. இப்போது நான் என்னை முழுமையாக உணர்கிறேன். இந்த நிலைமை என்னை முற்றிலும் மாற்றிவிட்டது மட்டுமின்றி என்னை ஒரு வலிமையான நபராக்கியது. எல்லோரும் சொல்வது போல் "எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கிறது, இதுவும் கடந்து போகும்’ என்றே கருதுகிறேன்’ என்று தத்துவ மழையை பொழிந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.