close
Choose your channels

'மன்மதன்' நடிகையின் கணவர் மாரடப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

Wednesday, June 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் சிம்பு நடித்த ’மன்மதன்’ படத்தில் நடித்த நடிகையின் கணவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு நடித்த ’மன்மதன்’ ஜிவி பிரகாஷ் நடித்த ’அடங்காதே’ போன்ற தமிழ் படங்களிலும், பல இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை மந்திரா பேடி. இவருடைய கணவர் ராஜ்குஷால் சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49. ராஜ் குஷாலின் மரணத்தை அடுத்து திரையுலகினர் மந்திரா பேடிக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு ராஜ் குஷாலை மந்த்ரா பேடிதிருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு வீர் என்ற ஒரு மகன் உள்ளார் என்பதும், அதன் பின்னர் பெண் குழந்தை ஒன்றை மந்த்ரா பேடி - ராஜ் குஷால் தம்பதியின் தத்தெடுத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மந்திரா பேடியின் கணவர் ராஜ் குஷாலுக்கு திடீரென இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது என்றும், இதனை அடுத்து அவர் உயிரிழந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அடுத்து பாலிவுட் திரை உலகினர் மந்திரா பேடி குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ராஜ்குஷால் அவர்கள் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்பதும் அவர் ஒருசில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.