close
Choose your channels

நடுரோட்டில் பாட்டு பாடியபடி படகில் செல்லும் தமிழ் நடிகர்!

Thursday, November 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக தமிழக மக்களை மிரட்டி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்தது. இந்த புயலால் கனமழை பெய்து அதன் காரணமாக சென்னை உள்பட ஒருசில கடலோர நகரங்களில் வெள்ளம் புகுந்துள்ளது

மேலும் சென்னையின் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் தமிழ் நடிகர் மன்சூர்அலிகான் தனது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை அடுத்து நடுரோட்டில் படகோட்டி கொண்டே பாட்டு பாடி செல்கிறார்

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ’பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ’உயிரே உயிரே’ என்ற பாடலின் மெட்டில் ’புயலே புயலே எங்கள் தமிழ்நாட்டை விட்டு ஓடிவிடு’ என்று பாடிக்கொண்டே அவர் படகோட்டும் காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.