close
Choose your channels

பாரா ஒலிம்பிக் போட்டி: தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதக்கம்!

Tuesday, August 31, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த சரத் குமார் என்பவரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்

இந்த நிலையில் இந்திய வீரர்களான மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார் மற்றும் அமெரிக்க வீரர் சாம் குரூவ் ஆகிய மூவருக்கும் பதக்கம் உறுதி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்திய வீரர்களான மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கமும் சரத் குமாருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. எனவே உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளதை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மற்றும் பீகாரைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய இருவருக்கும் அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.