close
Choose your channels

சென்னை திரும்புவது குறித்து ரஜினி கூறியது என்ன? தொலைபேசியில் பேசிய முக அழகிரி தகவல்

Saturday, December 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நேற்று ஒரு அறிக்கையும், இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது என்பதும் அந்த அறிக்கைகளில் நேற்றைவிட இன்று ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரஜினியை நேரில் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில் தொலைபேசி மூலம் முக்கிய பிரமுகர்கள் அவருடன் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ரஜினியிடம் தொலைபேசியில் பேசி உடல் நலம் விசாரித்த நிலையில் இன்று முன்னாள் திமுக மத்திய அமைச்சர் முக அழகிரி அவர்கள் தொலைபேசி மூலம் ரஜினியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’ரஜினிகாந்த் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாளில் சென்னை திரும்புவேன் என தன்னிடம் கூறியதாக முக அழகிரி தெரிவித்துள்ளார். ரஜினி சென்னை திரும்புவது குறித்த தகவலை அளித்த முக அழகிரி அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.