close
Choose your channels

மாரியப்பன் தங்கவேலின் ஆசையைக் கேட்டறிந்த பிரதமர் மோடி… வைரலாகும் உரையாடல்!

Tuesday, August 17, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம்தாண்டும் பிரிவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப்பதக்கம் வென்றார். தற்போது அவர் மீண்டும் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கிறார்.

அதோடு 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் கொரோனா காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட 2020 பாரா ஒலிம்பிக் போட்டி வரும் 24 ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்காக பெங்களுர் நகரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாரியப்பன் தங்கவேலுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி வாயிலாக பேசியுள்ளார்.

மாரியப்பன் தங்கவேலைத் தவிர அவரது தாய் மற்றும் சகோதரர்களும் இந்த காணொலி உரையாடலில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மாரியப்பனின் தாய் சரோஜாவிடம் பேசிய பிரதமர் மோடி, மாரியப்பனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதாகவும் அதற்கு நாட்டுக்கோழி மற்றும் சூப் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார் என்று அவரது தாய் தெரிவித்துள்ளார்.

மேலும் மாரியப்பனின் சகோதரர்கள் கோபி மற்றும் குமாருடன் பேசிய பிரதமர் மோடி தன்னாலான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். இந்த உரையாடலுக்குப் பின்பு மாரியப்பன் தங்கவேலுவுடன் பேசிய பிரதமர் மோடி டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.