close
Choose your channels

பராமரிப்பு இல்லாததால் சரிந்து விழுந்த மேம்பாலம்: கொல்கத்தாவில் பரபரப்பு

Tuesday, September 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடந்த 1970ஆம் ஆண்டு கட்டிய பாலம் ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்ததால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளது. இதனால் பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கீ பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த தகவல் அறிந்தவுடன் பேரிடர் மேலாண்மை மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முதல்கட்டமாக இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

இந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்களும் பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த வாகன்ங்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படாததால்தான் இடிந்துள்ளதாக கூறப்படுகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.