close
Choose your channels

சமந்தாவை பிரிந்தபின் ரூ.15 கோடி செலவு செய்த நாக சைதன்யா.. எதற்காக தெரியுமா?

Tuesday, March 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நாக சைதன்யா ரூ.15 கோடி மதிப்புள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்று ஜூப்லி ஹில்ஸ். இந்த பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை நாக சைதன்யா வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சமந்தாவின் பிரிவிற்கு பின்னர் தற்போது அவர் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த நடிகை சோபிதா துளிபலாவுடன் டேட்டிங் சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் நாக சைதன்யா இந்த புதிய வீட்டில் தான் வசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சமந்தாவுடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்த போது ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் சமந்தாவை பிரிந்தபின், அந்த வீட்டை சமந்தாவுக்கே அவர் கொடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா தற்போது புதிய வீட்டை வாங்கி இருக்கும் தகவல் இணையதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் நடிகை சோபிதா துளிபலாவுடன் நாக சைதன்யா இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கஸ்டடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.