close
Choose your channels

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமந்தா குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

Saturday, October 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நட்சத்திர தம்பதிகள் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய முடிவு செய்து அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் அறிவித்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு குறித்து நடிகர் நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ‘கனத்த இதயத்துடன் இதை நான் சொல்கிறேன். சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையில் நடந்தது மிகவும் துரதிஷ்டமானது. கணவன் மனைவிக்கு இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட முடியாது. 

இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே எனக்கு மிகவும் பிரியமானவர்கள். எங்கள் குடும்பம் எப்போதும் சமந்தாவுக்கு ஆதரவை அளிக்கும். அவர் எப்போதும் எங்களுடைய பிரியமானவராக இருப்பார். கடவுள் இருவருக்கும் மனவலிமையை கொடுக்க வேண்டி கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நாகார்ஜுனனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.