close
Choose your channels

அம்மன் கோவிலுக்கு சென்ற 'மூக்குத்தி அம்மன்' நயன்தாரா 

Tuesday, December 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கவிருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து நயன்தாரா விரதம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து சென்றுள்ளார். பகவதி அம்மன் கோவில் நிர்வாகிகள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வரவேற்று அவர்களுக்கு தரிசனம் செய்ய உதவி செய்ததோடு பிரசாதமும் அளித்தனர்.

இந்த நிலையில் நயன்தாரா அம்மன் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்ததும் ரசிகர்கள் கூட்டம் குவிந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

நடிகை நயன்தாரா ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கும் அம்மன் வேடத்தில் நடிக்க இருப்பதால் அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.